Wednesday, February 11, 2015

நான் ஏன் முஸ்லீம் ஆனேன்?

நமது இந்திய தேசத்தில் உள்ள பா.ஜ.க.,சிவசேனா போன்று இஸ்லாமிய எதிர்ப்பை கட்சியின் கொள்கையாக கொண்டு நெதர்லாந்து நாட்டில் செயல்படும் கட்சி “தீவிர வலதுசாரி இஸ்லாமிய எதிர்ப்பு சுதந்திர கட்சி “(GEERT WILDERS FAR RIGHT-WING ANTI-ISLAM FREEDOM PARTY).இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும்,அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹாக்(HAGUE)கின் கவுன்சிலராகவும் பதவி வகித்தவர் அர்னாடு வேண்டூன்(ARNOUD VANDOORN).இவர் தமது வாழ்வின் பெரும்பகுதியை இஸ்லாத்தை எதிர்ப்பதில் தான் கழித்தார். இந்நிலையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவாக சித்தரித்து திரைப்படம் எடுப்பது, கார்டூன் வரைவது ஆகியன சமீபகாலமாக ஐரோப்பிய கிறிஸ்தவ உலகம் செய்துவரும் காழ்புணர்வு காரியங்கள். இது உலகறிந்த உண்மை.அதன் அடிப்படையில் கடந்த 2012 ம் ஆண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்” திரைப்படம் வெளிவந்தது.அப்படத்திற்கெதிராக உலகம் முழுவதும் முஸ்லீம்கள் கொந்தளித்தார்கள்.பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.இது அர்னாடை சிந்திக்க வைத்தது.ஒருவர் இறந்து பால்லாண்டு கழிந்த பின்னரும் அவர் மீது இத்தனை மில்லியன் மக்கள் மரியாதை வைத்துள்ளார்களா?
அதற்கான காரணத்தை தேடி தொடர்ந்து இஸ்லாத்தை ஆய்வு செய்தார்.விளைவு அவர் கட்சியை விட்டு நீங்கினார்.மேலும் முஸ்லீம்களின் பழக்க வழக்கங்களைடும், பண்பாடுகளையும் தெரிந்து கொள்ள தன்னுடன் ஹாக் நகரில் பணியாற்றிய சக முஸ்லீம் நண்பர்களோடு பழகினார்.பின்னர் ஒரு முடிவுக்கு வந்து ஹாக் நகரில் உள்ள “மஸ்ஜிதுஸ்சுன்னா” பள்ளிவாசலுக்கு சென்று அங்குள்ள இமாம் “பவாஸ் ஜுனைத்” அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை ஏற்றார்.
இது பற்றி அவர் தனது வலைப்பக்கத்தில் கூறியதாவது:
“நான் எனது வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளேன்.அத்தவறுகள் எனக்கு பல பாடங்களை தந்துள்ளன.இஸ்லாத்தை எதிர்த்தே எனது வாழ்நாளின் பெரும் பகுதியை கழித்தேன்,ஆனால் இஸ்லாம் தான் எனக்கு நிம்மதியை தந்துள்ளது.இஸ்லாத்தை ஏற்ற பின்பே உண்மையான வழி எனக்கு கிடைத்தது.இப்போது நான் நம்புகிறேன்,இப்புதிய தொடக்கம் எனக்கு நல்ல விதமாகவே அமையும்.அத்துடன் எனது இந்த முடிவு பலத்த எதிர்ப்பை எதிர் கொள்ளலாம்.நிச்சயமாக அல்லாஹ்வின் எல்லா வகையான உதவிகளும் எனக்கு கிடைக்கும்.எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளிப்பேன் இன்ஷா அல்லாஹ்”-இவ்வாறு கருது தெரிவித்த இவர் பின்னர் 2013 ஏப்ரல் மாதம் உம்ரா செய்தார்.   


No comments:

Post a Comment