Friday, March 29, 2013

மஸ்ஜிதுல் அக்ஸா



                                                   மஸ்ஜிதுல் அக்ஸா

உலகின் இரண்டாவது ஆலயம் ”மஸ்ஜிதுல் அக்ஸா”

மஸ்ஜிதுல் அக்ஸா. இதன் பொருள் ‘ தொலைவிலுள்ள தொழுமிடம்’ என்பதாகும். இந்தப் பள்ளி வாயில் முதன் முதலாக நபி யஃகூப் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பின்னர் நபி சுலைமான் அவர்களால் ஜின்களின் மூலமாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

இதைப்பற்றி இறைவன் கூறும் பொழுது ‘ அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன் தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து வெகு தொலைவிலுள்ள பள்ளிக்கு (மஸ்ஜித் அக்ஸாவுக்கு) ஓரிரவில் அழைத்துச் சென்றான்.(ஆல்-குர்ஆன் 17:1)

இங்கு ஓரிரவு மிஃராஜ்-விண்ணேற்றத்தின் போது நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கிருந்து தான் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டனர். துவக்கத்தில் 18 மாதங்கள் மஸ்ஜிதுந்நபவீயில் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே நபி(ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் தொழுது வந்தனர். அதன் பிறகு 2:144-வது வசனம் அருளப்பட்டதும் கஃபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தனர்.

கி.பி 771-ல் நில அதிர்வால் சேதப்பட்ட பொழுது இதனை அப்பாஸியக் கலீஃபா மன்சூர் புனர் நிர்மாணம் செய்தார். சிலுவைப்போர் வீரரதகளின் கையிலிருந்த இதனை ஸுல்தான் ஸலாஹுத்தீன் கி.பி 1187-ல் வெற்றி கொண்டார்.

இப்புனிதப்பகுதி (மக்கா, மதீனா எல்லைகளைப் போல்) ‘ஹரம் ஷரீஃப்’ என்று அழைக்கப்படுகிறது. இது மக்கா, மதீனாவுக்கு அடுத்த படியாக புனித இடமாகும்.
’இங்குத் தொழப்படும் தொழுகை ஒருவர் தன் வீட்டில் தொழுவதை விட ஐநூறு மடங்கு மேலானதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.



Blog : http://tamilmumeen.blogspot.in/
Facebook : http://www.facebook.com/tamilmumeen

Tuesday, March 19, 2013

குர்ஆனில் கண்களின் அதிசயம் !!!!!



குர்ஆனில் கண்களின் அதிசயம் !!!!!

வைரங்கள் போல் மின்னிடும் அதிசயங்கள் பலவற்றை வான்மறை நெடுகிலும் காண முடிகிறது. கண்டும் காணாமல். கண்டதை ஆராயாமல் அலட்சியப்படுத்தும் மனிதனின் அவல நிலையை கண்டு, எப்படித்தான் அவனால அலட்சியப்படுத்த முடிகிறது? என அல்லாஹ்வே தன் அருள் மறையில் வியப்போடு குறிப்பிடுகிறான்.

‘நமது அத்தாட்சிகளை கண்டும் (காணாமல்) அவர்கள் அலட்சியப்படுத்திச செல்கின்றனர். (அல்-குர்ஆன் 54:2) எனவே, நாம் படிப்பினை பெறவும்,நமது நமடபிக்கையை வலுப்படுத்தவும் நாம் குர்ஆனில் பளிச்சிடும் அதிசயங்களை தொடர்ந்து காண்போம்.

ஒருவன் தன் கண் எப்படி இருக்கிறது? அது எப்படி இயங்குகிறது? ஆதன் மூலம் பார்வை எப்படிக் கிடைக்கிறது? என்பதை ஆராய முற்படின் அவன் இறைவனை ஏற்க வேண்டியது வரும் என்றார் ஓர் அறிஞர்..

ஆம்!உண்மை தான்! மனித உறுப்புகளில் அவனது கண்கள் மிகவும் விந்தையானவை!. அற்புதமானவை! வுல்லானின் வல்லமையை உணர்த்துபவை!

ஆகவே தான் அதனை ஆராய்ந்து பார்ப்பதற்காகவும்,அதன் புதுமைகளை தெரிந்து கொள்வதற்காகவும் இறைவன் திருக்குர்ஆனில்,
‘ நாம் அவனுக்கு இரு கண்களை அமைக்கவில்லையா? ‘ (அல்-குர்ஆன் 90:2) எனக்கேட்டு அதனை ஆராய்ந்து பார்ப்பதற்காக நம் சிந்தையை தூண்டுகிறதது அருள்மறை அல குர்ஆன்.

இன்று விஞ்ஞானத்துறையில் மனிதன் வியத்தகு சாதனைகளைச் செய்தும் கூட கண்களின் இயல்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு போலிக் கண்ணை அமைக்க இன்னும் அவனால முடியவில்லை. இதற்காகவது அந்த வல்ல நாயனுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஐவேளை என்ன ? ஐயாயிரம் வேளைகள் வேண்டுமானாலும் தொழலாம்..

கருவில் வளரும் கண்களின் அதிசயம்

கருவில் வளரும் குழந்தையின கண்கள் இயல்பாக அமைவதே ஓர் அதிசயமாக உள்ளது. குழந்தை பிறப்பதற்கு பல வாரங்களுக்கு முன்பே குழந்தைக்கு கண்கள் உருவாகி வளர்ச்சியடையத் துவங்குகிறது. உடலின் மென்மையான அந்த உறுப்புகள், உடலின் மிக இன்றியமையாத அந்தப்பகுதி, மனிதனுக்கு உணர்வையும் விழிபபையும் வழங்கும் அந்த அவயவம் எங்கே உருவாக்கப்படுகிறது தெரியுமா ? இருளில் தான் உருவாக்கப்படுகிறது இறைவனின் இந்த அற்புத சக்தியை ஒருகணம் எண்ணிப்பாருங்கள்.

‘இமைகள்’ கண்களின் மாபெரும் கவசங்கள்

குழந்தை பிறக்கும் போது ஒளியைக் காணும் சக்தி அதன் கண்களுக்கு இருக்கின்றன. என்றாலும் அதன் கண்கள் முழுமை பெற்று விட்டதாகக் கூறுவதற் கில்லை.அதிக ஒளியையும் குறைந்த ஒளிஐயயும் காணும் போது அதற்கேற்ப கண்களை இயக்கும் சக்தி தானாகவே வந்து விடுகிறது. ஆபத்துகளிலிருந்தும், புழுதிகளிலிலிருந்தும் தற்காத்துக் கொள்வதற்கு ‘இமைகள்’ என்னும் மாபெரும் கவசங்களை பாதுகாப்பிற்காகப் படைத்திருப்பதும் அது மிகவேகமாக இயங்குவதும் விந்தையிலும் விந்தையல்லவா?

அதைப்படைத்த நாயன் நம்மைப்பார்த்து ‘நாம் அவனுக்கு இரு கண்களை அமைக்கவில்லையா? ‘ எனக் கேட்கும் கேள்வியும் நியாயமானதல்லவா?

link : http://www.facebook.com/TamilMumeen

Wednesday, March 13, 2013

சிந்தனைக்கு சில நபிமொழிகள்


குர்ஆனில் கறையான்கள்!



திட்டமிட்டுச் செயலாற்றும் கறையான் (34:14)

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ

அவருக்கு (சுலைமானுக்கு) நாம் மரணத்தை விதித்த போது பூமியல் ஊர்ந்து செல்லும் 
கறையான் தான் அவரது மரணத்தை (ஜின்களுக்குக்) காட்டிக்கொடுத்தது. (34:14)

எறும்புகளைப்போல கறையான்கள் உருவத்தில் சிறிதாக இருந்தாலும், திறமையில் 
சிறந்தவை!
இந்த அற்பமான கறையான்கள் மனிதனே வியக்குமளவுக்கு புற்றுகளை ஒரு வரை 
படத்திலுள்ளது போல (Plan) திட்டமிட்டு மிக நேர்த்தியாக கட்டிமுடிப்பது அதிசயமாக உள்ளது. 
ஒரே நேரத்தில் ஒன்றல்ல, பல புற்றுகளை அதுவும் மிக உயரமான அளவுக்கு ஏழு மீட்டர் வரை 
( 21அடி ) கட்டி முடிக்கின்றன.

பல அறைகள்
குஞ்சுகள் தங்குவதற்கு தனி அறை!
கறையான்கள் உணவாக உட்கொள்ளும் காளான்களை உருவாக்குவதற்கு தனிக் கூடம் (Hall).
மற்றும் அதன் தலைவியான ராணிக்கு சிறப்பு அறை!

என பல சிறிய பெரிய பிரிவுகளைக் கொண்டது தான் கறையான் புற்று.
காற்றோட்ட வசதி (Ventilation )
புற்றுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது அதன் உள்ளறைகளில் கறையான்கள் உருவாக்கும் பிரத்தியேக குளிhந்த கற்றோட்ட வசதி.

மிகவும் மெல்லியத் தோல்களால் படைக்கப்பட்ட கறையான்கள் உயிர் வாழ குளிர்ந்த காற்றுத் 
தேவை. எனவே கறையான்கள் தங்களின் புற்றுக்களில் உள்ள அறைகளின் சீதோஷ;ண 
நிலையை (வுநஅpநசயவரசந) ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குளிர்ந்த நிலையில் வைத்துக் 
கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அவ்வாறில்லையெனில் வெப்பத்தின் காரணமாக அவை உயிரிழக்க நேரிடும். கறையான்கள் 
தங்களது புற்றுக்களில் உட்புறம் காற்று புகும் வகையில் துளைகளை உருவாக்குகின்றன. 
புற்றுக்களின் தரைப்பகுதியைத் தோண்டி தண்ணீரைக் கசியச் செய்கின்றன. புற்றுக்களின் 
தரைப்பகுதியில் கசியும் தண்ணீரும், வெளியிலிருந்து வரும் காற்றம் கலந்து 
கறையான்களுக்குத் தேவையான குளிர்ந்த வீதொஷண நிலை உருவாகின்றன.

இந்த குளிர்ந்த காற்றின் மூலம், கறையான்கள் தங்கள் புற்றுகளில் அவை உயிர்வாழவதற்குத் 
தேவையான ஈரப்பதத்தையும்,வெப்ப நிலையையும்,சம நிலையில் வைத்துக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு அற்புதச் செயலை செய்து முடிப்பதற்கு கறையான்கள் திட்டமிட்டும், ஒரு 
வரை யறைக்குள் பலவற்றை ஒன்றிணைத்தும் கவனத்திற்கொள்வது எவ்வளவு கடினமானது 
என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் குறிப்பிட்ட ஒன்றிரண்டைத்தான் இற்கே 
கூறியுள்ளோம்.. இவையல்லாது இன்னும் ஏராளமான செயல்களை செய்கின்றன.

பாதுகாப்பப்பணி

கறையான்களின் பண்புகளில் மிகவும் முக்கியமான மற்றொன்று தங்கள் புற்றுகளை 
பாதுகாக்கும் பணியாகும். தங்களின் ஏழுமீட்டர் உயரமுள்ள புற்றுக்களில் சிறிது பழுது 
ஏற்பட்டாலும் உடனடியாக கறையான்கள் எச்சரிக்கையாகிpவிடுகின்றன.

கடற்பாறைகளால் கூட இடிக்கமுடியாத அளவுக்கு மிகவும் கடினமாகவும்,பலமாகவும் 
புற்றுகளை அமைக்கும் அதிசய ஆற்றலை மிகவும் பொடிய இந்த கறையான்கள் பெற்றிருப்பது 
அதிசயமல்லவா?

கண்களே இல்லாத கறையான்கள்

இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் 
கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா?

கொசுக்களுக்கு 100 கண்களைக் கொடுத்த இறைவன் கண்களே இல்லாதும் என்னால் 
படைப்புகளை படைத்து இயங்கச் செய்யமுடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

தந்தையில்லாமல் நபி ஈஸாவை பிறக்கச் செய்த இறைவனுக்கு, தாயில்லாமல் ஹவ்வாவை 
பிறக்கச்செய்த இறைவனுக்கு, தாயும் தநதையும் இல்லாமல் பிறக்கச்செய்த இறைவனுக்கு, 
இது ஒன்றும் பெரிய காரியமல்ல.

link : http://www.facebook.com/TamilMumeen

Monday, March 11, 2013

ஓரங்களில் குறையும் பூமி


ஓரங்களில் குறையும் பூமி

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் 13:41

எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? அல்குர்ஆன் 21:44

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

Saturday, March 9, 2013

ஜூம்மா உரை 08-03-13 சவுக்கத் அலி உஸ்மானி


ஜூம்மா உரை 08-03-13 சவுக்கத் அலி உஸ்மானி

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!


குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!


கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!
விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் 
கீழே காணலாம்.

மேற்கொண்டு படியுங்கள்.
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.

8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு 
நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் 
வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு 
மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..

9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி 
சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை 
நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து 
தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.

11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத 
அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.
அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது 
என்ன வசனம் தெரியுமா? إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا நிச்சயமாக அல்லாஹ், 
கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற 
வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா? 
இணைவைப்பவர்களுக்கு உடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-
வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட 
இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? 
என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் 
கூறினான். 

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் 
மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது 
சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக 
இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு 
அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் 
மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவேர் அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய 
படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். இதில் நூறு கண்கள் 
இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் 
தோற்றத்தின் ஒரு பகுதியையும்,

முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய 
கண்களையும் படத்தில் காணலாம். ஸுப்ஹானல்லாஹ் ! அல்லாஹ் யாவற்றின் மீதும் 
ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

ஆதாரம்: அல்மஃரிபீ பில்குர்ஆனில் கரீம்.காம்,

விளம்பரங்களால் விபரீதங்கள்



இன்றைய ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் காண்பவர் அல்லது கேட்பவர் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.


நாம் சுவாசிக்கும் உயிர் காற்று நம்மை சூழ்ந்துள்ளது போன்று விளம்பரங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன.  குறிப்பாக குழந்தைகள் எங்கு திரும்பினாலும் விளம்பரங்கள் அவர்கள் முகம் பார்த்தே இருக்கின்றன.  வீட்டிலும், பள்ளி செல்லும் வழியிலும் விளம்பரங்கள் அவர்கள் கண்களை விட்டு மறைவதில்லை.
இன்றைய நாளில் பல்வேறு ஊடகங்களில் வெளிவரும் விளம்பரங்கள் நேரிடையாகவே நமது தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தடுக்கிறது.
எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் சாதாரண நிகழ்ச்சிகளையும், விளம்பரங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை என ஆய்வு கூறுகிறது.  இதனால், விளம்பரங்கள் சொல்வது உண்மையயன்றும், அதுவே சிறந்தது என்றும் நம்பி அதையே வாங்க விரும்புகின்றனர்.  ஒருவேளை தான் விரும்பியதை தன் பெற்றோர் வாங்கித் தர மறுக்கும் போது அதை எப்படியாவது அடைந்திட திருடவும் துணிகின்றனர்.
இன்று பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் குழந்தைகளைத் தங்களது உற்பத்திப் பொருட்களின் விளம்பர தூதுவர்களாகவும், வியாபாரத் தளமாகவும் பார்க்கின்றனர்.  எனவே, தான் ஊடகங்கள் வழியாக தங்கள் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி குழந்தைகளின் விருப்பங்களைக் கட்டுப்படுத்தும் காரணிகளாக விளம்பரங்களைத் திட்டமிட்டே உருவாக்குகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தாங்கள் தொலைக்காட்சியில் பார்த்த, மனதை ஈர்த்த புதிய பொருட்களை வாங்க தங்கள் பெற்றோரை வற்புறுத்துகின்றனர்.  இதைவிட பெரிய கொடுமை, இன்று குழந்தைகள் எந்தெந்த உணவு வகைகள் சாப்பிட வேண்டும் என விளம்பரங்களே அறிவுறுத்துகின்றன.
பகுத்து ஆராயும் வயதில்லாத குழந்தைகள் தாங்கள் பார்க்கும் உணவு விளம்பரங்களில் மயங்கி அதை உடனடியாக உண்ண ஆசைப்படுகின்றனர்.  பெற்றோர்களும் விளம்பரங்கள் பரிந்துரைக்கும் பொருள்களையே பல வேளைகளில் வாங்கியும் தருகின்றனர்.
இன்று தொலைக்காட்சிப் பெட்டி ஓலைக் குடிசைக்கும் சாத்தியமாகிவிட்ட சூழ்நிலையில் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்கும் விளம்பரங்கள் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் தன்னால் அப்பொருளை வாங்க முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் உருவாக்கி விடுகின்றது.
தன் வருமானத்தைக் கொண்டு, சுயமாகச் சிந்தித்து திட்டமிடாமல் விளம்பரங்களின் மாயையில் சிக்கி, வரம்புக்கு மீறிய செலவு செய்ததால் நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்கள் இன்று ஏராளம்.
நூறு சதவீதம் சரியானதைச் சொல்லி விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் இங்கு எதுவுமில்லை.  மாறாக, மக்களைச் சுண்டியிழுத்து விற்பனையைப் பெருக்க நெறிபிறழ்ந்து தயாரிக்கப்படுகின்றனர்.
வியாபாரமும், நுகர்வும் மனித வாழ்க்கையில் பிரிக்க முடியாத செயல்பாடாக பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன.  சமூகத்தின் மையமாக சந்தைகள் இன்றும் இடம் பெற்றிருப்பது இதற்குச்சான்று.
பெரும்பாலும் பெண்கள் தங்கள் சொந்த உபயோகம் சார்ந்த பொருட்களை வாங்குவதிலேயே அதிக செலவு செய்கின்ற காரணத்தால் அவர்களை இலக்காக கொண்டே விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
காலங்காலமாய் ஆணாதிக்க மனோபாவத்தால் பெண் மற்றவரை சுண்டியிழுக்கும் கவர்ச்சிப் பொருளாகவே பாவிக்கப்பட்டு வருகிறாள்.  அதன் அடிப்படையிலேயே விளம்பரங்களில் பெண்கள் கவர்ச்சி பதுமைகளாக காட்சிப்படுத்தப்படுகின்றனர்.
பொதுவாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் பாலுணர்வைத் தூண்டும் வக்கிர உத்தியை விளம்பர நிறுவனங்கள் கையாள்கின்றன.
ஒரு புடவையை சாதாரணமாக காட்டினாலே ஒரு பெண்ணால் தேர்ந்தெடுக்க முடியும் என்ற சூழலில் ஏன் பல பெண்களை அணிய விட்டு விளம்பரப்படுத்துகிறார்கள்?  இதன் உள்நோக்கம் என்ன?
பொதுவாக நம் சமூகத்தில் கணவரின் பணத்தைச் செலவழிக்க மனைவிக்கு முழு சுதந்திரமுண்டு எனும் எண்ணம் உண்டு.  ஆனால், இது வசதி படைத்த குடும்பத்திற்கு மட்டும் பொருந்துமே தவிர நடுத்தர குடும்பத்திற்குப் பொருந்தாது.  நடுத்தரக் குடும்ப மனைவிகள் பல வேளைகளில் தங்கள் தேவைகளைப் பெற்றுக் கொள்ள கணவன்மார்களின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.  இதன் அடிப்படையிலேயே சமூகத்தில் அதிகளவு இருக்கும் நடுத்தர குடும்பத்து மனைவிகளின் நுகர்வைப் பெருக்க அவர்களின் கணவன்மார்களை இலக்காக, அவர்களை ஈர்க்க விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன.
விளம்பரங்களில் பெண்களுக்கு அடுத்தபடியாக குழந்தைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் விளம்பரங்களே அதிகமாக இருக்கின்றன.  இது ஒரு விதத்தில் நடுரோட்டில் குழந்தையைக் காட்டி பிச்சையயடுக்கும் தந்திரமே.
மழலை முகத்துக்கு மயங்காதவர் எவருமில்லை.  இதை உணர்ந்தே விளம்பரங்கள் பெண்களுக்கு அடுத்தபடியாக குழந்தைகளைக் கொண்டு அதிகம் தயாரிக்கப்படுகின்றன.
உலகளவில் குழந்தைகளை ஆடை குறையுடனும், ஆடையில்லாமலும், குழந்தைத் தன்மையைச் சீரழிக்கும் விதமாக விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு அதிகளவில் ஒளிபரப்பப்படுகின்றன என 2007 ஆம் வருடம் “யுனிசெப்’ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
விளம்பரங்களில் வரும் குழந்தைகள் தங்கள் இயல்பு நிலையை மீறிய பெரியோர்களின் மனநிலையோடு பேச வைப்பது, உடையணிய வைப்பது போன்றவற்றால் அவர்களின் இயல்பு வாழ்க்கை சுரண்டப்படுகிறது.  மீறி பேசவும், நடவடிக்கைகளில் ஈடுபடவும் விளம்பரங்கள் மூலம் கற்றுக் கொள்கிறார்கள்.
சினிமா, சீரியல்களின் தாக்கம் பற்றிய விவாதங்களும், விமர்சனங்களும் பெரிதுபடுத்தப்படும் இந்நாட்களில் விளம்பரங்களும் சமூகச் சீரழிவுக்கு துணை போகின்றன எனும் உண்மையை நாள்தோறும் ரசித்து குடும்பத்தோடு பார்க்கும் நாம் கசப்போடு ஏற்றுக் கொள்கிறோம்.
தூணிலும், துரும்பிலும் வியாபித்திருக்கும் விளம்பரங்களை உடலிலும், உணர்விலும் ஆளுகைச் செய்ய விடாமல் பார்த்துக் கொள்வோம்.

Thursday, March 7, 2013

நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?


நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?


அரசத்துறவி இமாம் இப்றாஹீம் இப்னு அத்ஹம்(ரஹ்) அவர்களிடம் பஸரா நாட்டு மக்கள் 
‘எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டனர். உபதேசமா? என்ன உபதேசம் 
செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் இமாமவர்கள்

இறைவன் தனது திரு வேதத்தில்

‘என்னை அழையுங்கள். நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்’ (40:60) எனக் கூறியுள்ளான். 
நாங்கள் அவனிடம் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் எங்களுக்கு எந்த பதிலும் 
கிடைக்கவில்லையே! எங்கள் துஆக்கள் கபூலாவதில்லையே! ஏன்? ஏன்று மக்கள் கேட்டார்கள்.

நீங்கள் உயிரோட்டமுள்ள இதயங்களிலிருந்து இறைவனை அழைப்பதில்லை. உங்களிடம் 
காணப்படவேண்டிய பத்து விஷயங்கள் இல்லாது போய்விட்டதால் உங்கள் இதயங்களில் 
ஜீவனே இல்லை! என்று பதிலளித்தார் அந்த அறிஞர் பெருமகனார்.

பத்து விஷயங்களா? அவை என்ன? என்று வியப்போடு வினவினார்கள் அந்த மக்கள்.
மேதை இப்றாஹீம் அத்ஹம் பதிலளித்தார்:-

1. இறைவனை நீங்கள் உணருகிறீர்கள். ஆனால், அவன் ஏவிய வழிகளிலே நடந்து செயல்படத் 
   தவறிவிட்டீர்கள்.

2. திருக்குர்ஆனை ஓதுகிறீர்கள். ஆனால், அதைச் சரியாகப் புரிந்து கொண்டு நீங்கள் 
    செயலாற்றுவதில்லை.
3. பெருமானார்(ஸல்) அவர்களின் சமுதாயத்தவர் நாங்கள்! அவர்களை உயிரினும் மேலாக 
    நேசிக்கிறோம் எனப் பெருமைபப்டுகிறீர்கள். ஆனால், அவர்களது புனித வாழ்வு முறையை 
    நீங்கள் பின்பற்றுவது கிடையாது. 

4. சுவர்க்கத்தைப்பற்றி நிறைய பேசுகிறீhகள்! அதற்குச் செல்லவேண்டுமென 
    ஆசைப்படுகிறீர்கள். ஆனால், அதற்குத் தகுதியானவர்களாக ஆக எந்த முயற்சியும் நீங்கள் 
    செய்வதில்லையே!

5. நரகத்திற்குப் பயப்படுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் செய்யும் செயல்களோ 
   நரகத்தின் பால் உங்களை இழுத்துச் செலவதாகவே உள்ளன. ஆனால், நீங்கள் 
   அவற்றைவிட்டும் தவிர்ந்து கொள்வதாக இல்லையே!

6. மரணம் நிச்சயமானது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால், இந்த உலகமே சதமென்று 
    எண்ணிக் கொண்டு செயலாற்றுகின்றீர்கள்.

7. உங்கள் சகோதரர்களிடம் உள்ள சிறுகுறை கூட உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால, 
   உங்களிடம் மலிந்துள்ள பல குறைகளை நீங்கள் எண்ணிப் பார்ப்பதே கிடையாது.

8. ஷைத்தானை வெறுப்பதாகவும் அவன் உங்களின் மிகப்பெரிய எதிரி என்றும் வெளியிலே 
   பேசிக் கொள்கிறீர்கள். ஆனால், அந்தரங்கத்திலோ அவனை வரவேற்று விருந்தளித்து 
   கொஞ்சிக் குலாவி அவனுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள்.

9. இறைவன் உங்களிக்களித்துள்ள அருட் பெரும் கொடைகளை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். 
   ஆனால், அவனுக்கு நன்றியுள்ள அடியானாக நீங்கள் நடந்து கொள்வதில்லையே?

10. இறந்தோரை புதைகுழி வரை சென்று புதைத்துவிடுகிறீர்கள். ஆனால், அதிலிருந்து நீங்கள் 
     எந்தப் படிப்பினையும் பெறுவதில்லையே?

இந்த நிலையிலுள்ள உங்கள் அழைப்பிற்கு (துஆவுக்கு) இறைவன் எப்படி பதிலளிப்பான்?
இவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து நடக்கலானார் அந்த மாமேதை. மக்களோ தங்களின் 
நிலையை எண்ணி மனம் உருகினார்கள். தங்களின் குறைகளை அசை போடலானார்கள்.

நாமோ நம் குறைகளைப்பற்றி எந்தக்கவலையும்படாமல் நம்மைத் திருத்திக்கொள்ளாமல் 
நடமாடிக் கொண்டிருக்கிறோமே! இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வாழ்வு?

ஏழு பெரும் பாவங்கள்


Monday, March 4, 2013

ஜூம்மா உரை 01-03-13 இமாம் சவுக்கத் அலி உஸ்மானி


குர்ஆனில் பத்து கட்டளைகள்


வான்மறையில் பூமியைப்பற்றி ..




      பூமி எவ்வாறு விரிக்கப்பப்பட்டுள்ளது என்பதை அவர்கள் (ஆராய்ந்து) பார்க்க வேண்டாமா?
(அல்குர்ஆன் 88: 20)

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதில் இரவு பகல்
மாறிவருவதிலும் அறிவுடையோருக்கு சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)

வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிடப் பெரியது.
(அல்குர்ஆன் 40: 57)

         இவ்வாறாக திருக்குர்ஆனில் 461 தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தையும் அதிசயங்களையும் அறியலாம்.

இதோ இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில:

1. பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.
2. பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.
3. பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்.
4. எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி உயரம்.
5. பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.
6. இப்போது நாம காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின் பொறுக்கு. சுமார் 25 
    மைல் வரை தான் இந்தப் பொறுக்கு.

7. அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.
8. அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும் இரும்பும் உருகி 
    உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்.
9. இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.
10. இதையெல்லாம் தோண்டிப் பார்க்க நம்மிடம் ராட்சஸ இயந்திரங்கள் இல்லை. ஆனால்,      
     ரஷ70 அடிவரை அதிக ஆழம் தோண்டிப் பார்த்திருக்கிறார்கள்.
11. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.
12. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம் செய்கிறோம்.
13. பூமி தன்னனைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து போகிறோம்.
14. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23 மணி 
      நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)
15. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும்..(அதாவது 365 நாட்களும் 6 மணி 
     நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.) 

16. சந்திரனோ பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

17. பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பிறழாமல் 
     சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
18. பூமியிலிருந்து சற்திரன் இரண்டு லட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு 
     அப்பால்இருக்கிறதது.
19. பூமியின் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பாகம் மேற்பரப்பில் தான் 
     உயிரினங்கள் வாழ்கின்றன. (பூமியின் ழுழுப்பரப்பின் 70.8 விழுக்காடு கடல்கள்.மீதமுள்ள 
     பகுதியே நாம் வாழும் பகுதி.)
20. பூமியின் மேற்பரப்பை நான்கு கோளங்னாகப் பிரிக்கலாம். 1. பாறைக்கோளம்.2. நீர்கோளம்.   
     3. வளிமண்டலம் (யவஅழளிhநசந) உயிர்கோளம்
      எத்தனை பிரயாணங்கள் ?

21. தன்னைத்தானே சுற்றும் பிரயாணம்!
22.சூரியனை சுற்றும் பிரயாணம்!
23. சூரியன், சதிரன், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்கள் இவற்றோடு சேர்ந்து செய்யும் பிரபஞ்சப் 
     பிரயாணம்.! இங்கேயும் முடிவில்லை.
24. பிரபஞ்சம் முழுமையாக சேர்ந்து அண்ட வெளியில் வெளிநோக்கி வளைய 
     மடித்துக்கொண்டு போகும் பிரயாணம்!

      ஆக நான்கு பிரயாணங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். அதே நேரம் நாம்   
      எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீட்டிலே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிஙோம்.

25. நாம் நினைப்பது போல் பூமி ஒன்றா ? ஒரே ஒரு பூமி மட்டுமல்ல. ஒரு சூரிய குடும்பத்துக்கு 
    ஒரு பூமி. உலகில் பல சூரிய குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு சூரிய குடும்பத்துக்கும் 
    ஒவ்வொரு பூமி உள்ளது. ஒரு பால் வெளியில் (புயடயஒல) 200 பில்லியன் நட்சத்திரங்கள் 
   உள்ளன. பால் வெளி; (புயடயஒல)என்பது ஒன்றா? நூறா ? அதுவே 200 பில்லியன் பால் 
  வெளிகள்; (புயடயஒல க்கள்) உள்ளன. அப்டியானால் உலகில் எத்தனை பில்லியன் 
   நட்சத்திரங்கள் இருக்கும். படைத்தவனுக்கே வெளிச்சம்.

  அல்லாஹ்வின் கணக்கில்லா இந்த அற்புதப் படைப்புகளின் எண்ணிக்கை பற்றியோ, 
அவற்றின் அற்புதத் தகலவல்கள் பற்றியோ விஞ்ஞானிகள் கூறுவதைக்கேட்டாலே தலை 
சுற்றுகிறது. இனியும் என்னன்ன கண்டுபிடிக்கப் போகிறார்களோ ? அல்லாஹ்வின் அற்புதப் 
படைப்புகள் பற்றி சிந்தித்து அவனைப் புகழ்ந்து அவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா ?

Saturday, March 2, 2013

இமாம்கள்,நிர்வாகிகள்,பெற்றோர்கள் ,பிள்ளைகள் ,இளைஞர்கள் இவர்களின் பொறுப்பு


குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி இஸ்லாமிய சகோதரர்கள் நடத்திய  விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் இமாம்கள்,நிர்வாகிகள்,பெற்றோர்கள் ,பிள்ளைகள் ,இளைஞர்கள் இவர்களின் பொறுப்பு என்ற தலைப்பில் நாகர்கோவில் கலாசாரப்பள்ளியின்  தலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி  அவர்கள் ஆற்றிய உரை