Saturday, December 5, 2015

தமிழகத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் நமது கலாச்சாரப் பள்ளிவாசலில் கடந்த ஜுமஆ அன்று ரூபாய் 1,00,000 (ஒருஇலட்சம்) பொதுமக்கள் மூலம் வசூல் செய்யப்பட்டது. அதை குமரிமாவட்ட கலெக்டர் திரு சஜ்ஜன்சிங் சவான் அவர்களிடம் கலாச்சாரப் பள்ளிவாசலின் தலைவர் ஹாஜி உமர் அலி, துணைத்தலைவர் கலீல்ரஹ்மான், செயலாளர் முஹம்மதுரபீக், பொருளாளர் ஹாஜி செய்யது ,தலைமைஇமாம் சவுக்கத் அலி உஸ்மானி, மற்றும் வழக்கறிஞர் ஹாஜி முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் வழங்கினர். மேலும் இதற்கு உதவிபுரிந்த அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.(ஜசாக்கல்லாஹ் ஹைரன்)