Monday, November 11, 2013

ஆஷுரா நோன்பு- ஒரு பார்வை:


ஆஷுரா நோன்பு- ஒரு பார்வை:

link :https://www.facebook.com/TamilMumeen

இஸ்லாமிய மார்க்கம் எப்போதுமே அதன் தனிச்சிறப்புக்களில் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. மனித உள்ளத்தின் மேம்பாட்டிற்காக மறக்காமல் எப்போதுமே வழிகாட்டுகின்றது. இதோ வல்ல ரஹ்மான் வாரிவழங்கும் நன்மையும் சிறப்புக்களும் இந்த ஆஷுரா நோன்பில் அமைந்துக் கிடக்கின்றது.

ஆஷுரா என்பது ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாத்தின் பத்தாம் நாளைக் குறிக்கும்.

ஆஷுரா நோன்பின் சிறப்பு: -

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது ஆஷுரா நாளில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதை அறிந்ததும் இது ஏன் என்று வினவினார்கள். அதற்கு யூதர்கள் “இது ஒரு சிறந்த நாளாகும், இன்றைய தினத்தில் தான் அல்லாஹ் இஸ்ரவேலர்களை எதிரிகளிடமிருந்து விடுவித்தான். எனவே அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். “மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதற்கு நான் உங்களை விட அதிக உரிமையுள்ளவன்” என்று கூறிவிட்டு அந்நாளில் நோன்பு நோற்குமாறு மக்களை ஏவினார்கள். (ஆதாரம்: புகாரி)

ஆஷுரா தினத்தன்று அண்ணலார் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதுடன் பிறரையும் நோற்குமாறு ஏவினார்கள். அப்போது தோழர்கள்: ‘அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினத்தை யூத கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்துகின்றனரே’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியாயின் அடுத்த ஆண்டு அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்போம்’ என்று கூறினார்கள்.

மற்றுமொரு அறிவிப்பின்படி, ‘அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்’ என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வரு முன்பே மரணத்தைத் தழுவி விட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா நோன்பின் பலன்: -

ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்பது, கடந்த ஆண்டு செய்த பாவங்களை அழித்து விடும் என்பது நபி மொழியாகும். (ஆதாரம்: முஸ்லிம்)

ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதன் நோக்கமாவது, பத்தாம் நாள் பத்தாம் நாள் மட்டும் நோன்பு நோற்கும் யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதுவே. பத்தாம் நாள் நோற்பதன் காரணம் அந்நாளில் நல்ல காரியங்கள் பல நடந்திருக்கின்றன. அதாவது அல்லாஹ் தன் நேசர்களான மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றியோரையும் காப்பாற்றி, அவர்களின் எதிரிகளான ஃபிர்அவ்னையும் அவனைச் சார்ந்தோரையும் கடலில் மூழ்கடித்தது இந்நாளில் தான்.

இந்த சிறப்புப் பொருந்திய நாளில் அறியாமையின் காரணமாக பல அனாச்சாரங்கள் நடைபெறுகின்றன. அவைகளை விட்டும் தவிர்ந்து நடப்பது அவசியமாகும். ஏனென்றால் நோன்பைத் தவிர வேறு எந்த விஷேச வணக்க வழிபாடும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரபட வில்லை. ஆனால் மார்க்கத்தின் பெயரால் பல புதிய வணக்கங்களை சிலர் உருவாக்கியுள்ளனர்.

ஆஷுரா தினத்தன்று நடைபெறும் அனாச்சாரங்களில் சில: -

ஆஷுரா தினத்தன்று விஷேசப் பிரார்த்தனைகளை ஏற்படுத்தி, அதை ஓதுபவர்கள் அந்த வருடம் மரணிக்கப்படமாட்டார்கள் என நம்புவது

சாம்பிராணி புகையிட்டு அது பொறாமை, துவேஷம், சூனியம், முதலியவற்றை முறித்து விடும் என உண்ணுவது

வழக்கத்திற்கு மாறாக விஷேச உணவு சமைத்தல்

புத்தாடை அணிதல்

ஆடம்பரமாக செலவழித்தல்

விஷேச தொழுகை ஏற்படுத்துதல்

துக்கம் அனுஷ்டித்தல்

ஆடைகளைக் கிழித்தல்

மண்ணறைகளையும் மஸ்ஜிதுகளையும் தரிசித்தல்

போன்றன இந்நாளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அநாச்சாரங்களாகும். இதுபோன்ற எவற்றிற்கும் மார்க்கத்தில் இடமில்லை என்பதால் முற்று முழுதாக இவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

சத்திய பாதையில் வாழ்ந்து சத்தியவான்களாக மரணிக்க வல்ல ரஹ்மான் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!

Wednesday, October 23, 2013

இளம்பெண்களின் இன்றைய நிலை:


ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.
இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.
இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;
தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்;
மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.
அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)

இஸ்லாத்தின் பார்வையில் புகைப்பழக்கம்


அனைத்து சமுதாய மக்களையும் ஆட்டுவிக்கும் ஆட்கொல்லியாக புகைப்பழக்கம்உள்ளது. மனிதனின் உடலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் மதுவை தடை செய்தது போல் புகைப்பிடித்தல் பற்றி திருக்குர்ஆனும் நபிமொழியும் நேரடியாகத் தடை செய்யவில்லை என்று கருதி சிகரெட், சுருட்டு, பீடி போன்றவற்றை உபகோகிக்கும் முஸ்லிம்கள் தாங்கள் தடைசெய்யப்பட்ட ஒரு செயலை செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் புகைபிடித்து வருகின்றார்கள்.
புகைபிடித்தலை இஸ்லாம் தடை செய்யவில்லை என்று வாதிடவும் முஸ்லிம்களில் சிலர் வெட்கப்படுவது இல்லை. திருக்குர்ஆனும் நபிமொழியும் தடை (ஹராம்) செய்துள்ள செயல்களின் தன்மைகள் அனைத்தையம் தன்னகத்தே கொண்டுள்ள செயல்தான் புகைப்பிடித்தலாகும் என்பதில் சந்தேகமில்லை.
முழு மனித சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு உலகத்தில் உள்ள அனைத்து செயல்களின் வழிகாட்டியாக அமைந்துள்ளது திருக்குர்ஆன்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் இன்னும் நன்மை செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை   -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2: 195)
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் இன்னும் நன்மை செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை   -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2: 195)
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 29)
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும்,பரிசுத்தமானவற்றையும்  உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனானவான் என்று அல்குர்ஆன் 2: 168 கூறுகின்றது.
தனக்குத்தானே அழிவைத் தேடித்தரும் அனைத்துச் செயல்களையும் திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் தடை செய்துள்ளன. புகைப்பிடிக்கும் மனிதன் தன்னை மெல்ல மெல்ல அழித்துக் கொள்கிறான் என்பதற்கு அடுக்கடுக்கான மருத்துவச் சான்றுகள் வந்தவண்ணம் உள்ளன.
புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா, ஆண்மையின்மை, குறைபிரசவம், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கு வழித்தடம் அமைத்துக் கொடுக்கிறது. இந்தப்பழக்கத்திற்கு அடிமையாகும் மனிதன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான் என்பதில் சந்தேகமில்லை.
அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் விஷம் உட்கொண்டு தன்னைத் தானே கொன்று விடுகிறாரோ அவர் நரக நெருப்பிலும் விஷத்தை உட்கொண்டு அதில் என்றென்றும் நிரந்தரமாக தங்கி விடுவார். அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி) அவர்கள் நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்
புகைத்தலின் மூலம் மனிதர் உள்ளிலுக்கும் புகையில் நிக்கோடின், கார்பன், டார், கார்பன் மோனாக்ஸைடு, ஆர்செனிக் போன்ற கடும் நச்சுப் பொருட்கள் உள்ளன. இந்த நச்சுகள் உள்ளுறுப்புகளை நாசமாக்கி தவணை முறையில் உயிரைப் பறிக்கும். மேற்கண்ட திருக்குர்ஆன், நபிமொழியின்படி பார்த்தால் புகைப்பவர்கள் தன்னைத்தானே அழித்துக் கொள்பவர்கள் என்பதும் புகைப்பழக்கம் நரகிற்கு அழைத்துச் செல்லும் என்பதும் சந்தேகம் இல்லை. அல்லாஹ் மிக நன்கு அறிந்தவன்.

Saturday, June 29, 2013

இறைதூதர்களின் வேதக்கட்டளைகள்




இறைதூதர்களின் வேதக்கட்டளைகள்

இறைவனால் நபிமார்களுக்கு என்னென்ன வேதக்கட்டளைகள் அருளப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.அவைகளில் மிகவும் முக்கிய மானவற்றை குர்ஆன் பின்வருமாறு பட்டியலிட்டுக் கூறுகிறது.

1.இறைதூதர்கள் யாவரும் நமது கட்டளைப்படி வேதத்தையும், நீதியையும் நிலைநாட்டி வரவேண்டும்..
‘நாம் நமது தூதர்களை தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம்.’ (57:25)

2.அவர்கள் உழைத்து ஹலாலான உணவை தேடிக் கொள்ள வேண்டும்.
‘தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள். நல்ல முறையில் (உழைத்து)ச் செயலாற்றுங்கள். (23:51)

3.முன்வாழ்ந்த நபிமார்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் நாம் கடைபிடித்து வரும் நல்ல அமல்கள், வணக்கங்கள் போன்றவற்றைச் செய்து வரவேண்டுமென வும் கட்டளையிடப்பட்டுள்ளனர்.
‘நல்லவற்றை செய்யுமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும்,ஸகாத் கொடுக்கு மாறும் அவர்களுக்கு அறிவித்தோம்.(குர்ஆன்-21: 73)

4.இறைர்}தர் இஸ்மாயீல் (அலை)அவர்கள் தமது மக்களுக்கு தொழுகையையும், ஸகாத்தையும் போதித்து வரக்கட்டளையிடப்பட்டார்.
‘அவர்கள் தமது குடும்பத்தாருக்கு தொழுகையையும், ஸகாத்தையும் ஏவக்கூடிய வராக இருந்தார்கள். (குர்ஆன்-19: 55)

5. நபி மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் கூறினான்.
‘என்னை நீர் வணங்குவீராக. என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக. (குர்ஆன்-20: 14)

5. நபி ஈஸா(அலை) அவர்கள் “நான் உயிருடனிந்து என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸகாத் கொடுக்குமாறும் (இறைவன்) எனக்குக் கட்டளையிட்டான்”. (குர்ஆன்-19: 31.32) எனக்கூறினார்கள்.

6. நோன்பு நம்மீதும் கடமையாக்கப்பட்டதைப் போன்றே நமக்கு முன்வாழ்ந்தவர்கள் மீதும் கடமையாக்கப்பட்பட்டுள்ளது.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக நோன்பு உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டவாறே உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (குர்ஆன்-2:183)

7. இப்றாஹீம் (அலை) அவர்கள் கஃபாவை கட்டி முடித்ததும் அவர்கள் மீது ஹஜ்ஜு கடமையாக்கப்பட்டது.
‘ மக்களுக்கு ஹஜ்ஜைப்பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், மெலிந்த ஒட்கத்தின் மீதும் மீதும் வருவார்கள். (குர்ஆன்-22:27.)

8. உலகிலுள்ள அனைவருக்கும் இப்றாஹீம் (அலை) செய்த ஹஜ்ஜுக்கிரியை களையும், வணக்கங்களையும் எல்லோர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.

‘சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தியுள்ளோம். (குர்ஆன்-22:34)
‘ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். அதை அவர்கள் கடைபிடிக்கின்றனர். (குர்ஆன்-22:67)

ஏகத்துவ நெறி, தொழுகை,நோன்பு,ஸகாத்,ஹஜ்ஜு ஆகிய இறைவனின் முக்கியக்கட்டளைகள் அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான கட்டளைகளாகவே இருந்துவந்துள்ளன. ஏகத்துவ நெறியையும், நல்லறங்களையும்,வணக்க வழிபாடுகளையும் செய்யுமாறு கட்டளையிடப்படும். அதே வேளையில் இறைவனுக்கு இணைகற்பித்தலையும் அசத்திய வழியையும் நெறியற்ற வாழ்வையும் எதிர்;த்துப் போராடவேஇறைதூதர்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர்.

ஆகாதவைகளையும், மனித இயற்கைக்கு மாறாக வாழ்ந்த லூத் மக்களையும், உலகில் இறைவனுக்கெதிராக இறுமாப்புடன் வாழ்ந்த ஆது,தமூத் மக்களையும் இறைதூதர்களை எதிர்த்துநின்ற கொடுங்கோலர்களையும் அவ்வப்போது அழித்துபின் வரும் மக்களுக்கோர் பாடமாகவும்,தடயமாகவும் இறைவன் ஆக்கியிருப்பதை அருள் மறை அழகாகப் படம் பிடித்துக்காட்டுறது. அவன் கூறியவாறே யாவும் காலத்தால் நிரூபணமாகிவருகிறது.

ஷரீஅத்தை நடைமுறைப் படுத்துவோம்


ஷரீஅத்தை நடைமுறைப் படுத்துவோம்

Saturday, May 4, 2013

இஸ்லாத்தின் பார்வையில் கோபம் ?



மனிதனின் இயல்பான குணங்களில் கோபம் மிகவும் ஆபத்தானதாகும்.இது ஷைத்தானின் மிகப்பெரும் ஆயுதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு சிறந்த அறிவாளியை கூட கோபம் குருடனாக மாற்றிவிடும்.கோபத்தில் ஒருவன் தன்னிலை மறந்துவிடுவான்,ஒருவகையில் கோபக்காரனும் பைத்தியக்காரனும் ஒன்றுதான்.

சமூகத்தில் நிகழும் தீமைகளில் பெரும்பாலும் கோபத்தின் பின்னனியில் தான் நிகழ்கிறது.தன் மனைவியை விவாகரத்துச்செய்தவனை கேட்டுப்பாருங்கள்,கோபத்தில் சொல்லிவிட்டேன்.சேர வழியுண்டா?என்று மார்க்க மேதைகளை தேடி அலைபவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

கோபத்தில் தலாக் சொல்லிவிட்டேன் என்ற வார்த்தையே அபத்தமானது,காரணம் கோபத்தில் தான் தலாக் சொல்வான்.நல்லா இருக்கும்போது யாராவது சொல்வானாஅதனால் தான் நீ கோபத்தில் சொன்னாலும் கேலிக்கு சொன்னாலும் தலாக் ஏற்பட்டுவிடும் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்

சிறை தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குற்றவாளியிடமும் கேட்டுப்பாருங்கள் ,நீ ஏன் இந்த குற்றத்தை செய்தாய்எனக்கு கோபம் வந்து விட்டது அதனால் நான் அவனை கொலைசெய்தேன் என்பான்.

أقبل إلى النبي -صلى الله عليه وسلم- رجل يجر رجلاً آخر بنسعة، يعني قد ربطه بحبل من جلد فهو يجره إلى النبي -عليه الصلاة والسلام-، قال: يا رسول الله، انظر هذا، قد قتل أخي. فالتفت النبي -صلى الله عليه وسلم- إلى الرجل المربوط وقال له: "أحقا قد قتلته؟". قال: نعم يا رسول الله قد قتله، قال: "ما حمَلَكَ على ذلك؟" فقال الرجل: يا رسول الله، كنا نحتطب، يعني نحتطب الشجرة، قال: فسبني، فأغضبني، فأخذت الفأس فضربت به على قرنه حتى قتلته يا رسول الله

رواه مسلم
நபி ஸல் அவர்களிடம் ஒருவர் இன்னொருவரை கயிற்றால் கட்டி இழுத்து வந்துஅல்லாஹ்வின் தூதர் அவர்களே!இவர் என் சகோதரனை  கொலை செய்துவிட்டார்.என்று கூறினார்.

உண்மையில் நீ தான் கொலை செய்தாயா?என நபி ஸல் அவர்கள் அவரிடம் விசாரித்தார்கள்.அவரும் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!ஆம் நான் தான் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்.

ஏன் கொலை செய்தாய் என்று காரணத்தை கேட்டபோது-அம்மனிதர்,
நாங்கள் மரம் வெட்டிக்கொண்டிருந்தோம்.அப்போது அவருக்கும் எனக்கும் ஒருவிஷயத்தில் கருத்துவேறுபாடு வந்தது.உடனே அவர் என்னை திட்டினார்எனக்கோ கோபம் வந்துவிட்டது.நான் என் கையில் இருந்த கோடரியை கொண்டு அவரின் தலையில் ஒருபோடுபோட்டேன், அவர் மரணித்துவிட்டார்.  என்று கூறினார்.

இந்த ஹதீஸின் விரிவுரையில் இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள்

قال ابن القيم رحمه الله : وأما الغضب فهو غول العقل يغتاله كما يغتال الذئب الشاة وأعظم ما يفترسه الشيطان عند غضبه وشهوته.(التبيان في أقسام القرآن /265 )

ஓநாய் ஆட்டை ஆட்டை வேட்டையாடுவதுபோல கோபம் அறிவை வேட்டையாடிவிடும் என்று கூறுகிறார்கள்.ஒரு மனிதன் அதிகமாக ஷைத்தான் வலையில் மாட்டுவது இரு தருணங்கலில் தான்,
ஒன்று: கோபத்தில் மற்றொன்று ஆசையில்.

மனிதன் மிகவும் சாதாரணமாக ஆட்பட்டுவிடுகிற இந்த கோபத்தின் விளைவு பல ஆண்டுகள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது.
அதனால் தான் ஒரு சிறந்த அறிவாளிக்கான அடையாளத்தை குறிப்பிடும் நபி ஸல் அவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தும் தன்மையை கூறுகிறார்கள்.

பலதலைமுறையாக சேர்ந்து வாழ்ந்த குடும்பம் ஒருகோபமான வார்த்தை
யால் பல தலைமுறை பிரிந்து விடுகிறது.
அல்லாஹுத்தஆலா இறையச்சமுடையவர்களின் தனமைகளை திருமறையில் கூறும்போது-

الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّـهُ يُحِبُّ 

الْمُحْسِنِينَ
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும்துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். என்று கூறுகிறான்.

இங்கே ஒரு விஷயத்தை அழுத்தமாக புரியவேண்டும்.அது என்னவெனில் கோபத்தை அடைக்கவேண்டும் என்பது நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில் அடக்கிக்கொள்வதல்ல,மாறாக தன்னால் கோபப்பட முடியும், அதற்கான எல்லா வழிமுறைகளும் உண்டு என்ற நிலையில் கோபத்தை அடக்கிக்கொள்ளவேண்டும்.

உதாரணமாக நம்முடைய முதலாளி நம்மை கோபப்படுத்துகிறார்.ஆனால் நாம் பொருமையை கடைபிடித்தோம்.அதேசமயம் நம்முடைய பணியாள் நம்மை கோபப்படுத்தும்போது நாம் சகித்துக்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்,இதுவே காழிமீன் எனும் இறைவசனத்தின் பொருளாகும்.

இரு நிகழ்வுகளை இதற்கு உதாரணம் சொல்ல்லாம்.

முதலாவது நிகழ்வு:

جلس مرة علي بن الحسين -رضي الله تعالى عنه ورحمه-، جلس مرة ودعا بماء ليتوضأ، فأقبلت إليه الجارية، وكانت جارية عجلة، فلما جعلت توضئه ناداها مَن ناداها، فألقت هذا الإبريق الذي كان في يدها، وقد كان نزع عمامته ليتوضأ، فضربه الإبريق في رأسه فشجه، وجعل الدم يسيل، فنظر إليها وكأنه يقول: ما هذه العجلة؟ وكيف تلقين ما يدك إلقاءً ولا تعلمين أني اتوضأ وأنك واقفة؟.

فلما نظرت إليه وقد احمرت عينه من الغضب، قالت له: يا سيدي، والكاظمين الغيظ، قال: كظمت غيظي، قالت: والعافين عن الناس، فسكت، وقال: عفوت عنكِ، قالت: والله يحب المحسنين، قال: أعوذ بالله من الشيطان الرجيم: أنتي حرة لوجه الله


مجمع البيان 2/505
ஹழ்ரத் ஹுஸைன் ரலி அவர்களின் மகனார் ஹழ்ரத் அலி ரஹ் அவர்கள் ஒழுச்செய்வதற்காக தண்ணீர் கொண்டுவரச்சொல்லி தன் பணிப்பெண்ணுக்கு உத்தரவிட்டார்கள்.
அப்பெண்தன் முதலாளியின் உத்தரவுக்கு செவிமடுத்து வேகமாக தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தாள்.

ஹழ்ரத் அலி ரஹ் அவர்கள் ஒழுச்செய்வதற்காக தங்களின் தலைப்பாகையை கழட்டி விட்டு கீழே தயாராக உட்கார்ந்திருந்தார்கள்.

அவசரமாக அந்த தண்ணீர் பாத்திரத்தை கொண்டுவந்த அப்பெண் கை தவறி அவர்களின் தலையில் போட்டுவிட்டாள்.அதனால் அவர்களின் தலை உடைந்துஇரத்தம் வடிந்துகொண்டிருக்கிறது.

கடும் கோபத்தால் ஹழ்ரத் அலி ரஹ் அவர்களின் கண்கள் சிவந்துவிட்டதை பார்த்த அப்பெண்-
என் தலைவர் அவர்களே!  والكاظمين الغيظ நல்லடியார்கள் கோபத்தை அடக்குவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் என்றாள்.உடனே அவர்கள் நான் கோபத்தை அடக்கிவிட்டேன் என்றார்கள்.

والعافين عن الناس  மன்னித்துவிடுவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான் என்றாள்.  உடனே அவர்கள் நான் உன்னை மன்னித்துவிட்டேன் என்றார்கள்.

மூன்றாவது அப்பெண்  والله يحب المحسنين  அல்லாஹ் உபகாரிகளை நேசிக்கிறான் என்று கூறுகிறான் என்றாள்.அப்போது அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக உன்னை உரிமை விடுகிறேன் என்றார்கள்.

இரண்டாவது நிகழ்வு:

ومَرَّ النبيّ -صلى الله عليه وسلم- كما في البخاري بأبي مسعود البدري -رضي تعالى عنه-، قال أبو مسعود: "كنت أضرب غلاما لي، أخذ الصوت وضرب، فبينما هو يضربه وهو قد ارتفع عليه الغضب حتى يكاد لا يعرِف من حوله، وإذا بصوت ورائي يقول: "اعلم أبا مسعود، اعلم أبا مسعود، اعلم أبا مسعود"، قال فلم ألتفت إليه من شدة الغضب، من شدة غضبه وهو يضرب الغلام، لم يلتفت إلى من يحدثه، ويقول: "اعلم أبا مسعود"، قال: فالتفتُّ فإذا رسول الله -صلى الله عليه وسلم-، قال: "اعلم أبا مسعود أن الله أقدر عليك منك على هذا الغلام"، يعني أن غضبت فضربت هذا الغلام المسكين الذي لا يستطيع أن ينتصر لنفسه، الله أقدر عليك منك على هذا الغلام، قال فقلت : يا رسول الله هو حُرٌّ لوجه الله.
நபித்தோழர் அபூமஸ்வூத் பத்ரி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருநாள் கடுமையான கோபத்தில் இருந்த நான் என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன்.என்னை சுற்றியிருப்பவர்கள் யாரும் எனக்கு தெரியாத அளவுக்கு கோபம்.அப்போது எனக்கு பின்னால் இருந்து -அபூ மஸ்வூதே! எச்சரிக்கை.- அபூ மஸ்வூதே! எச்சரிக்கை. -அபூ மஸ்வூதே! எச்சரிக்கை. என்று ஒரு சப்தம் கேட்டது.
கடும் கோபத்தில் இருந்ததால் நான் திரும்பிப்பார்க்கவில்லை.மீண்டும் அந்த சப்தம் ஒலித்தபோதுதான் நான் திரும்பி பார்த்தேன்,அல்லாஹ்வின் தூதர் ஸல்  அவர்கள் நிற்கிறார்கள்.
அபூ மஸ்வூதே! தெரிந்துகொள்! உன் அடிமையின் மீது நீ பெற்றுள்ள ஆற்றலை விடவும் அதிகமாக அல்லாஹ் உன் மீது ஆற்றல் பெற்றுள்ளான் என்று கூறினார்கள்.அதாவது உன் ஏழையான அடிமையை ஒரு குற்றத்திற்காக நீ கோபப்பட்டுஅடிக்கிறாய்.ஆனால் நாளை மறுமையில் அல்லாஹ் உன் குற்றத்திற்காக உன்மீது கோபம் கொண்டு உன்னை தண்டித்தால்-உன் நிலை என்ன?என கேட்டார்கள்.

உடனே நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ்வுக்காக என் அடிமையை உரிமை விட்டுவிட்டேன் என்றார்கள்.

நம்முடைய கோபம் செல்லுபடியாகும் இடத்தில் கோபத்தை அடக்கியாள வேண்டும்.

நபிமார்களின் கோபம்
அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிமார்கள் கோபப்பட்டிருப்பதாக திருக்குர் ஆனில் வருகிறது.
நபிமார்கள் தங்களின் சுயவிஷயங்களுக்காக கோபப்படமாட்டார்கள்.  தங்களுக்காக யாரையும் பழிவாங்கவுமாட்டார்கள்.ஆனால் அல்லாஹ்வுக்காக அவர்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள்.

நபி மூஸா அலை அவர்கள் கோபம் கொண்டார்கள்.அவர்களின் கோபத்தை பற்றி திருக்குர்ஆன் இப்படி விவரிக்கிறது.
நபி மூஸா அலை அவர்களை பார்த்து பிர்அவ்ன் இவ்வாறு கூறினான்
أَمْ أَنَا خَيْرٌ مِنْ هَذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ
அல்லதுஇழிவானவரும்தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா?
தன்னை பற்றி பிர்அவ்ன் இழிவாக பேசியபோது கூட கோபப்படாத மூஸா அலை அவர்கள் தன் சமுதாயம் காலைமாட்டுக்கன்றை வணங்கியதாக கேள்விப்பட்டபோது கடுமையாக கோபம் கொண்டார்கள்.
தன் கையில் இருந்த தவ்ராத் பலகையை தூக்கிவீசினார்கள்.
ஹாரூன் அலை அவர்களின் தாடியை பிடித்தார்கள்.இதுவே இறைகோபமாகும்.
وَلَمَّا رَجَعَ مُوسَىٰ إِلَىٰ قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِن بَعْدِي ۖ أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ ۖ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன்விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டுதம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார்.
நபி நூஹ் அலை அவர்கள் கப்பல் செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் சமுதாய மக்கள் இப்படி பரிகாசம் செய்தார்கள்
كيف يا نوح تبني فلكاً في بَرٍّ؟
நூஹே! தரையில் கப்பல் எப்படி ஓடும்?
قد صار نوح نجاراً بعد أن كان نبيا؟
இவர் நபிவேலையை விட்டுவிட்டு தச்சராக மாறிவிட்டார்.என்றெல்லாம் கேலிசெய்தபோது கோபப்படாத நபி நூஹ் அலை அவர்கள் -950 ஆண்டுகால தஃவாவும் பலனின்றி, அச்சமுதாய மக்கள் இணைவைப்பில் அவர்கள் உறுதி யாக நின்றபோது கடும்கோபம் கொண்டு இப்படி துஆச்செய்தார்கள்
قَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا
அப்பால் நூஹ் கூறினார்: "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
இவ்வாறே நபி ஸல் அவர்கள் குறித்து அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
قالت: ما كان يغضب لنفسه قط، وما ضرب النبي -صلى الله عليه وسلم- بيده امرأة ولا خادماً، إلا أن يجاهد في سبيل الله.
நபி ஸல் அவர்கள் தனக்காக யாரையும் கோபம் கொண்டதில்லை,தன் கையால் மனைவியையோ,வேலையாட்களையோ அடித்த்தில்லை.ஆனால் அல்லாஹ்வுக்காக கோபம் கொண்டுள்ளார்கள்.
இன்னொறு அறிவிப்பில் தனக்காக யாரையும் பழிவாங்கியதில்லை என்றும் கூறுகிறார்கள்.
தன்னை இழிவுபடுத்தி வேதனை செய்த தாயிப் மக்களை தண்டிக்கவா?என்று கேட்டபோது
"لا، بل أستأني بهم؛ لعل الله أن يخرج من أصلابهم من يعبد الله لا يشرك به شيئا"
வேண்டாம் விட்டுவிடுங்கள்.இவர்களின் சந்ததியாவது தவ்ஹீதை ஏற்கும் என்று ஜிப்ரயீலிடம் கூறினார்கள்.
அதேசமயம், அல்லாஹ்வின் தாயீக்களை-அழைப்பாளர்களை-ஹாபிழ்களை அழைத்துச்சென்று கருவறுத்தபோது நபி ஸல் கடுமையாக கோபம்கொண்டார்கள் மாத்திரமல்ல அவர்களுக்காக பத்துஆச்செய்தார்கள்.
எனவே கோபம் அல்லாஹ்வுக்காக இருக்கும்போது அதை அல்லாஹ் ரசிப்பான்.
கோபத்தை கட்டுப்படுத்த கண்மணி ஸல் அவர்கள் வழங்கிய அறிவுரைகள்
1.ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுவது
جلس النبي -صلى الله عليه وسلم- في مجلسه يوما -كما عند البخاري- فإذا برجلين يتلاحيان، برجلين في المسجد يتلاحيان، ثم بدأت أصواتهم ترتفع، فغضب أحدهما حتى جعل يزبد فمه من شدة الغضب، من شدة الغضب والسباب ليس عنده وقت ليبلغ ريقه، فجعل الريق يجتمع في جوانب فمه حتى أصبح الريق زبدا يقع من فمه مثل البعير، فقال النبي -صلى الله عليه وسلم-: "إني لأعرف كلمة لو قالها"، يعني لو قالها هذا الغاضب، "إني لأعرف كلمة لو قالها ذهب عنه ما يجد"، قالوا: يا رسول الله: ما هي؟ قال: "لو قال: أعوذ بالله من الشيطان الرجيم ذهب عنه ما يجد".

النسائي

நபி ஸல் அவர்களின் சபையில் இருவர் தங்களின் சப்தம் உயர்த்தி கடுமையாக சண்டையிட்டுக்கொண்டார்கள்.அதை கண்ணுற்ற நபி ஸல் அவர்கள்-
எனக்கு ஒரு கலிமா தெரியும். அதை இந்த கோபக்காரர்களில் ஒருவர் சொன்னால் அவரின் கோபம் உடனே அடங்கிவிடும் என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! அந்த கலிமாவை சொல்லித்தாருங்கள் என்று அருமை தோழர்கள் சொன்னபோது-
: أعوذ بالله من الشيطان الرجيم  என்று கூறினார்கள்.
2.கோபம் வந்தால் அமைதியாகிவிடவேண்டும்.எதுவும் பேசக்கூடாது.
وقال: "إذا غضب أحدكم فليسكت".
உங்களில் ஒருவர் கோபப்பட்டால் அமைதியாக வாய்மூடிவிடட்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.அதனால் தான் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள். தங்களின் ஆட்சியாளருக்கும் நீதிபதிகளுக்கும் எழுதிய கடிதமொன்றில்-

قال عمر بن عبد العزيز: وقد أرسل إلى عمّاله بوصية، وعماله الذين يحكمون بين الناس وهم وزراؤه في المناطق، أرسل إليهم قائلا: لا تعاقب إذا كنت غضبان، ولا تقتضي إذا كنت غضبان... وإن أغضبك أحد فاحبسه إلى غد، ثم أقض فيه أمرك.
கோபமாக இருக்கும்போது யாருக்கும் தண்டனை வழங்க வேண்டாம்.
தீர்ப்புச்செய்யவேண்டாம்.நீங்கள் கோபத்தில் இருந்தால் வழக்கை மறுநாள் மாற்றுங்கள் என்று எழுதினார்கள்.
3.கோபம் வந்தால் ஒழுச்செய்துவிடவேண்டும்
إنَّ الغضب من الشيطان، وإن الشيطان خلق من نار، وإن النار إنما تطفأ بالماء، فإذا غضب أحدكم فليتوضأ،
கோபம் ஷைத்தான் விளையாட்டு,ஷைத்தான் நெருப்பு படைப்பு,நெருப்பை அணைக்க தண்ணீரே சரியான தீர்வு எனவே கோபப்பட்டால் ஒழுச்செய்யுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
4.இரண்டு இரக்கஅத் தொழுவது
وإلا فلْيُصَلِّ ركعتين
ஒழுச்செய்தும் கோபம் குறையாவிட்டால் இரண்டுஇரக்கஅத் தொழுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

Wednesday, May 1, 2013

அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்



அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்


கான் பாகவி

லக முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 219கோடியாக உயரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 161 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவின் PEW எனும் சமயம் மற்றும் பொதுவாழ்வு ஆய்வு மையம்அடுத்த 20ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் மக்கள் தொகை 35 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 2010இல் 1.6 மில்லியராக இருந்த இந்த எண்ணிக்கை, 2030இல் 2.2 மில்லியராக உயரலாம். (ஒரு மில்லியர் அல்லது பில்லியன் என்பது 100 கோடி ஆகும்.)
பியூ ஆய்வு மையத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது. இது அரசியல் சார்பற்றதுமதப் பாகுபாடு பாராட்டாததுபியூ அறக்கட்டளைதான் இதற்கு நிதியுதவி செய்துவருகிறது. இம்மையத்தின் மேலாளர்: Luis Lugo.
 

 
உலகமெங்கிலுமுள்ள பல்துறை அறிஞர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். 2010ஆம் ஆண்டின் ஆய்வு முடிவை முன்பே அறிவித்திருந்த இந்த மையம்இப்போது அடுத்த இரு தசாப்தங்களுக்கான ஆய்வின் எதிர்பார்ப்பு என்ன என்பதை வெளியிட்டுள்ளது.


அடுத்த இருபது ஆண்டுகளில்


எதிர்வரும் இரு தசாப்தங்களில் முஸ்லிம் அல்லாத மக்களின் சராசரி ஆண்டு வளர்ச்சி 0.7 விழுக்காடாக இருக்கும் நிலையில்முஸ்லிம் மக்களின் சராசரி வளர்ச்சி 1.5 விழுக்காடாக இருக்கும்.


2030ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை சுமார் 8.3 மில்லியராக (830 கோடி) இருக்கும் நிலையில்மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 26.4 விழுக்காடாக இருப்பர்.2010இல் உலக மக்கட்தொகை 6.9 மில்லியர் (690 கோடி) என்பதும் அதில் 23.4விழுக்காடு முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.


இருப்பினும்முஸ்லிம் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 1990-2010 தசாப்தங்களில்2.2 விழுக்காடாக இருந்ததுஇது 2010-2030 ஆகிய தசாப்தங்களில் 1.5 விழுக்காடாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


5 தசாப்தங்களில் மக்கட்தொகை


ஆண்டு
1990
2000
2010
2020
2030
மற்றவர்கள் (மில்லியர்)
4.2
4.8
5.3
5.8
6.1
முஸ்லிம்கள் (மில்லியர்)
1.1 (19.9%)
1.3 (21.6%)
1.6 (23.4%)
1.9 (24.9%)
2.2 (26.4%)
                

 
கண்டங்கள் வாரியாக முஸ்லிம் மக்கட் தொகை

                                                             2010                                2030

கண்டங்கள்
முஸ்லிம் மக்கட்தொகை
உலக முஸ்லிம்களில் விழுக்காடு
முஸ்லிம் மக்கட்தொகை
உலக முஸ்லிம்களில் விழுக்காடு
உலகம்
161,93,14,000
100%
219,01,54,000
100%
ஆசியா மத்திய தரைக்கடல் பகுதி
100,55,07,000
62.1%
129,56,25,000
59.2%
மத்திய கிழக்குவட ஆப்ரிக்கா
32,18,69,000
19.9%
43,94,53,000
20.1%
ஆப்ரிக்கா &தெற்கு பாலைவனம்
24,25,44,000
15.0%
38,59,39,000
17.6%
ஐரோப்பா
4,41,38,000
2.7%
5,82,09,000
2.7%
அமெரிக்கா
52,56,000
0.3%
1,09,27,000
0.5%

ஐரோப்பா


அடுத்த 20 ஆண்டுகளில்இந்தோனேசியாவைவிட பாகிஸ்தானில் முஸ்லிம் மக்கட்தொகை உயரும்.

எகிப்தைவிட நைஜீரியாவில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகும்.

ஐரோப்பாவில் மொத்த மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கை முஸ்லிம் மக்கட்தொகை நெருங்கிவிடலாம். 2010இல் 6 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள்2030இல் 8.2 விழுக்காடாக உயர்வர். அதாவது ஐரோப்பிய முஸ்லிம்களின் எண்ணிக்கை (2010) 44.1 மில்லியனிலிருந்து (2030) 58.2 மில்லியனாக அதிகரிக்கும்.




நாடு
2010(மொத்த மக்கட்தொகையில் சதவீதம்)
2030
(மொத்த மக்கட்தொகையில் சதவீதம்)
ஆஸ்திரியா
5.7%
9.3%
சுவிட்சர்லாந்து
4.9%
9.9%
பெல்ஜியம்
6%
10.2%
ஃபிரான்ஸ்
7.5%
10.3%
பிரிட்டன்
4.6%
8.2%


அதிகரித்த ஆயுள்


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெரும்பாலும் 15-29ஆக இருக்கிறது. பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. சுகாதாரம் மேம்பட்டுள்ளது. குழந்தை இறப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது. மனித ஆயுள் கூடியுள்ளது. இத்தியாதி காரணங்களால் முஸ்லிம் மக்கட்தொகை பெருகுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாடுகளில் 30 வயதுக்கு மேற்பட்டோர் 40 முதல் 50 விழுக்காடு இருப்பர்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 7 முதல்12 விழுக்காடு இருப்பர். நடுத்தர வயதினர் 1990இல் 19 விழுக்காடு; 2010இல் 24விழுக்காடு; 2030இல் 30 விழுக்காடு இருப்பர்.

2030ஆம் ஆண்டில் உலகிலுள்ள ஒவ்வொரு 10 இளைஞர்களில் மூவர் முஸ்லிம்களாக இருப்பர். 15 முதல் 29 வயது வரையிலானவர்களில் 29.1 விழுக்காடு முஸ்லிம்களாக இருப்பர் என எதிர்பார்க்கலாம். இது 2010இல் 25.8 விழுக்காடாகவும்1990இல் 20 விழுக்காடாகவும் இருந்தது.

2030இல் முஸ்லிம்களில் சன்னிகளே 87-90 விழுக்காடு இருப்பார்கள். ஷியா முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு.

உலக முஸ்லிம்களில் 74.1 விழுக்காட்டினர் 49 நாடுகளில் பெரும்பான்மையினராக (2010) வாழ்கின்றனர். முஸ்லிமல்லாதோர் பெரும்பான்மையாக உள்ள வளரும் நாடுகளில் 23.3 விழுக்காடு முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

முஸ்லிம்களில் 3 விழுக்காட்டினர்வளர்ந்த நாடுகளான ஐரோப்பாஅமெரிக்கா,ஆஸ்திரேலியாநியூஸிலாந்துஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் 47.8 விழுக்காடு இல்லத்தரசிகள் (15-49 வயதினர்) ஏதேனும் ஒரு குடும்பக் கட்டுப்பாடுச் சாதனம் பயன்படுத்துகின்றனர். மற்ற நாடுகளில் இது 63.3 விழுக்காடாக உள்ளது.

ஆசியா


ஆசிய நாடுகளில் 2030இல் 10 பேரில் 3 பேர் (27.3%) முஸ்லிம்களாக இருப்பார்கள்.2010இல் 24.8 விழுக்காடாக இது இருந்தது. சீனாவில் முஸ்லிம்கள் 2 விழுக்காடே இருந்தாலும், 2030இல் உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா19ஆம் இடத்தில் இருக்கப்போகிறது.


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் முன்னணியில் இருப்பது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகள்தான். இந்தப் பிராந்தியத்தில் உள்ள 20 நாடுகளில் -இஸ்ரேலைத் தவிர- மொத்தத்தில் 50விழுக்காடு முஸ்லிம்கள் 2030இல் இருப்பர்; 17 நாடுகளில் 75 விழுக்காட்டைவிடக் கூடுதலாக இருப்பர்.

பாலஸ்தீனத்தில் 2010இல் 17.7 விழுக்காடு முஸ்லிம்கள் இருந்தனர். இது 2030இல் 23.2விழுக்காடாக -அதாவது 2.1 மில்லியனாக- உயர வாய்ப்பு உண்டு.

ஆப்ரிக்கா மற்றும் தெற்குப் பாலைவனப் பகுதிகளில் அடுத்த 20 ஆண்டுகளில் 38.59கோடி (60%) முஸ்லிம்கள் இருப்பார்கள். ஐரோப்பாவில் மொத்த மக்கட் தொகையில்10 விழுக்காடு முஸ்லிம்களாக இருப்பர்.

கொசோவா: 93.5%; அல்பேனியா: 83.2%; போஸ்னியா: 42.7%; மாசிடோனியா: 40.3%;பல்கேரியா: 15.7%; ரஷியா: 14.4%; ஜார்ஜியா: 11.5%; பிரான்ஸ்: 10.3%; பெல்ஜியம்:10.2%.

அடுத்த 20 ஆண்டுகளில் கனடாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கலாம். அதாவது 9,40,000லிருந்து 20,70,000ஆக உயரக்கூடும். இதுமொத்த மக்கட்தொகையில் 6.6 விழுக்காடு ஆகும்.

அல்லாஹ்வே மிகப் பெரியவன்!

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

(நன்றி: ஆலூகா (அரபி) இணையதளம்)
http://www.alukah.net/World_Muslims/0/47000/#Comments
http://www.pewforum.org/global-muslim-population.aspx