Monday, March 4, 2013

வான்மறையில் பூமியைப்பற்றி ..




      பூமி எவ்வாறு விரிக்கப்பப்பட்டுள்ளது என்பதை அவர்கள் (ஆராய்ந்து) பார்க்க வேண்டாமா?
(அல்குர்ஆன் 88: 20)

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதில் இரவு பகல்
மாறிவருவதிலும் அறிவுடையோருக்கு சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)

வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிடப் பெரியது.
(அல்குர்ஆன் 40: 57)

         இவ்வாறாக திருக்குர்ஆனில் 461 தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தையும் அதிசயங்களையும் அறியலாம்.

இதோ இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில:

1. பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.
2. பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.
3. பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்.
4. எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி உயரம்.
5. பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.
6. இப்போது நாம காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின் பொறுக்கு. சுமார் 25 
    மைல் வரை தான் இந்தப் பொறுக்கு.

7. அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.
8. அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும் இரும்பும் உருகி 
    உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்.
9. இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.
10. இதையெல்லாம் தோண்டிப் பார்க்க நம்மிடம் ராட்சஸ இயந்திரங்கள் இல்லை. ஆனால்,      
     ரஷ70 அடிவரை அதிக ஆழம் தோண்டிப் பார்த்திருக்கிறார்கள்.
11. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.
12. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம் செய்கிறோம்.
13. பூமி தன்னனைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து போகிறோம்.
14. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23 மணி 
      நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)
15. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும்..(அதாவது 365 நாட்களும் 6 மணி 
     நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.) 

16. சந்திரனோ பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

17. பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பிறழாமல் 
     சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
18. பூமியிலிருந்து சற்திரன் இரண்டு லட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு 
     அப்பால்இருக்கிறதது.
19. பூமியின் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பாகம் மேற்பரப்பில் தான் 
     உயிரினங்கள் வாழ்கின்றன. (பூமியின் ழுழுப்பரப்பின் 70.8 விழுக்காடு கடல்கள்.மீதமுள்ள 
     பகுதியே நாம் வாழும் பகுதி.)
20. பூமியின் மேற்பரப்பை நான்கு கோளங்னாகப் பிரிக்கலாம். 1. பாறைக்கோளம்.2. நீர்கோளம்.   
     3. வளிமண்டலம் (யவஅழளிhநசந) உயிர்கோளம்
      எத்தனை பிரயாணங்கள் ?

21. தன்னைத்தானே சுற்றும் பிரயாணம்!
22.சூரியனை சுற்றும் பிரயாணம்!
23. சூரியன், சதிரன், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்கள் இவற்றோடு சேர்ந்து செய்யும் பிரபஞ்சப் 
     பிரயாணம்.! இங்கேயும் முடிவில்லை.
24. பிரபஞ்சம் முழுமையாக சேர்ந்து அண்ட வெளியில் வெளிநோக்கி வளைய 
     மடித்துக்கொண்டு போகும் பிரயாணம்!

      ஆக நான்கு பிரயாணங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். அதே நேரம் நாம்   
      எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீட்டிலே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிஙோம்.

25. நாம் நினைப்பது போல் பூமி ஒன்றா ? ஒரே ஒரு பூமி மட்டுமல்ல. ஒரு சூரிய குடும்பத்துக்கு 
    ஒரு பூமி. உலகில் பல சூரிய குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு சூரிய குடும்பத்துக்கும் 
    ஒவ்வொரு பூமி உள்ளது. ஒரு பால் வெளியில் (புயடயஒல) 200 பில்லியன் நட்சத்திரங்கள் 
   உள்ளன. பால் வெளி; (புயடயஒல)என்பது ஒன்றா? நூறா ? அதுவே 200 பில்லியன் பால் 
  வெளிகள்; (புயடயஒல க்கள்) உள்ளன. அப்டியானால் உலகில் எத்தனை பில்லியன் 
   நட்சத்திரங்கள் இருக்கும். படைத்தவனுக்கே வெளிச்சம்.

  அல்லாஹ்வின் கணக்கில்லா இந்த அற்புதப் படைப்புகளின் எண்ணிக்கை பற்றியோ, 
அவற்றின் அற்புதத் தகலவல்கள் பற்றியோ விஞ்ஞானிகள் கூறுவதைக்கேட்டாலே தலை 
சுற்றுகிறது. இனியும் என்னன்ன கண்டுபிடிக்கப் போகிறார்களோ ? அல்லாஹ்வின் அற்புதப் 
படைப்புகள் பற்றி சிந்தித்து அவனைப் புகழ்ந்து அவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா ?

No comments:

Post a Comment